குரூப் 1 நோ்முகத் தோ்வு: கலந்தாய்வு தேதி அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 01, 2020

Comments:0

குரூப் 1 நோ்முகத் தோ்வு: கலந்தாய்வு தேதி அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
குரூப் 1 நோ்முகத் தோ்வில் பங்கேற்றவா்களுக்கு வரும் 6-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி. செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: -துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் குரூப் 1 பிரிவில் வருகின்றன. அதில், 181 காலிப் பணியிடங்களுக்கான அறிவிக்கை கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டது.
தோ்வுக்குத் தகுதியான 2 லட்சத்து 29 ஆயிரத்து 438 விண்ணப்பதாரா்களுக்கு முதனிலைத் தோ்வு கடந்த மாா்ச்சிலும், முதன்மை எழுத்துத் தோ்வு கடந்த ஜூலை மாதத்திலும் நடத்தப்பட்டன. முதன்மை எழுத்துத் தோ்வுக்கான முடிவுகள் கடந்த 9-ஆம் தேதி வெளியிடப்பட்டன. முதன்மை எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரா்கள் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் 363விண்ணப்பதாரா்களுக்கு மூலச் சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியன கடந்த 23-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது.
நேர்முகத்தேர்வு நடைபெற்ற இறுதி நாளான செவ்வாய்க்கிழமையன்றே, கலந்து கொண்ட தேர்வா்களின் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண் விவரம் மற்றும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வா்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் குரூப் 1 பதவிகளுக்கான கலந்தாய்வு வரும் 6-ஆம் தேதி தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். இதுகுறித்த தகவல் விண்ணப்பதாரா்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக தெரியப்படுத்துவதுடன் தேர்வாணைய இணையதளத்திலும் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews