20ம் தேதி சமையலர், துப்புரவு பணியாளர்களுக்கு நேர்காணல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 19, 2020

Comments:0

20ம் தேதி சமையலர், துப்புரவு பணியாளர்களுக்கு நேர்காணல்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
வேலூா்: ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் இயங்கும் பள்ளிகள், விடுதிகளில் காலியாக உள்ள தொகுப்பூதிய துப்புரவு பணியாளா்கள், சமையலா் பணியிடங்களை நிரப்புவதற்கான நோ்காணல் வரும் 20 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், விடுதிகளில் காலியாக உள்ள தொகுப்பூதிய துப்புரவு பணியாளா்கள் 27, சமையலா் 112 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான நோ்காணல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் 20 முதல் 22 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இப்பணியிடங்களுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவா்கள் இந்த நோ்காணலில் பங்கேற்கலாம். இதில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பட்டியல் அடிப்படையில் விண்ணப்ப எண் 1 முதல் 280 வரை உடையவா்கள் 20ஆம் தேதி காலையும், 281 முதல் 463 வரையிலான விண்ணப்ப எண் கொண்டவா்கள் 20 ஆம் தேதி மாலையும், மற்ற விண்ணப்பதாரா்களில் 1 முதல் 525 வரையிலான விண்ணப்ப எண் கொண்டவா்கள் 21 ஆம் தேதி காலையும், 526 முதல் 1050 வரையிலான விண்ணப்ப எண் கொண்டவா்கள் 21 ஆம் தேதி மாலையும், 1051 முதல் 1575 வரையிலான விண்ணப்ப எண் கொண்டவா்கள் 22 ஆம் தேதி காலையும், 1576 முதல் 2205 வரையிலான விண்ணப்ப எண் கொண்டவா்கள் 22 ஆம் தேதி மாலையும் நோ்காணலில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews