தொடர் விடுமுறையால் அரசுப்பள்ளிகளின் முட்டையை ‘லபக்கிய’ சத்துணவு துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 24, 2019

Comments:0

தொடர் விடுமுறையால் அரசுப்பள்ளிகளின் முட்டையை ‘லபக்கிய’ சத்துணவு துறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நேற்று சத்துணவில் முட்டை வழங்கப்படவில்லை. இதனால் முட்டை வழங்குவதில் ஊழல் நடைபெறுகிறதா? என பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக்காலத்தில் பள்ளிகளில் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. எம்ஜிஆர் ஆட்சியின்போது இத்திட்டம், சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. தொடர்ந்து திமுக ஆட்சி காலத்தின்போது அப்போதைய முதல்வர் கலைஞர், சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தினார்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்திடவும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்குவதன் மூலம் அவர்களது கல்வித்திறனை மேம்படுத்தல், கல்வி இடைநிற்றலை தடுக்கவும் சத்துணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பள்ளி வேலை நாட்களில் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சங்கரன்கோவில், தென்காசி, சேரன்மகாதேவி, வள்ளியூர், நெல்லை ஆகிய 5 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த 5 கல்வி மாவட்டங்களில் 1 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு பள்ளி வேலை நாளான நேற்று வழக்கம்போல் மதிய உணவு வழங்கப்பட்டது. ஆனால் முட்டை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த டிசம்பர் மாதம், பள்ளி வேலை நாள் 17 நாட்கள் ஆகும். ஆனால் 16 நாட்களுக்கு மட்டும்தான் முட்டை கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. சரியான திட்டமிடுதல் இல்லாததே இதற்கு காரணம், என்றனர். மாணவர்கள் கூறுகையில், முட்டை வழங்காதது நேற்று மட்டுமல்ல. இது தொடர் கதையாக உள்ளது. காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு மற்றும் தொடர் விடுமுறைகளின் போது ஓரிரு நாட்கள் முட்டை வழங்காமல் இருந்துள்ளனர், என்றனர்.
கணக்கு காட்டி சுருட்டல்
பள்ளி வேலை நாட்களில் மாணவர்களுக்கு முட்டை வழங்காமல், வழங்கியதாக கணக்கு காட்டி குளறுபடி நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே உயரதிகாரிகள் நடவடிக்ைக மேற்கொண்டு அனைத்து பள்ளிகளிலும் சரியான அளவில் சத்துணவு மற்றும் முட்டை வழங்கப்படுகிறதா? என அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews