பள்ளிகளில் இடைவேளையின்போது மாணவர்கள் தண்ணீர் குடிக்க நேரம் ஒதுக்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 26, 2019

2 Comments

பள்ளிகளில் இடைவேளையின்போது மாணவர்கள் தண்ணீர் குடிக்க நேரம் ஒதுக்க உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. போதிய தண்ணீர் உடலில் இல்லாவிட்டால் தசைப் பிடிப்புகள் அதிகரிக்கும். அவற்றை சரி செய்ய தண்ணீர் உதவும். குடலியக்கத்தை தண்ணீர் சீராக வைப்பதால் மலச்சிக்கல் தவிர்க்கப்படும். போதிய அளவு தண்ணீர் அருந்துவதால் சிறுநீர் பாதை தொற்று குறையும். இந்த அறிவுரைகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு அறிவுரையாக தெரிவித்து போதுமான தண்ணீர் அருந்த நேரம் ஒதுக்கி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை மேற்பார்வையிட ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. பள்ளி மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது குறித்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவுரை. காலை, மாலை இடைவேளை, மதிய உணவு நேரத்தில் மாணவர்கள் போதுமான தண்ணீர் அருந்த வேண்டும். மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை மேற்பார்வையிடவும் அறிவுறுத்தவும் ஆசிரியர்களுக்கு வலியுறுத்தல்.
மாணவர்கள் தண்ணீர் குடிக்க வசதியாக புதுச்சேரி பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம் இன்று (25ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. பாடச்சுமை காரணமாக பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் அருந்த நேரம் கிடைக்கவில்லை,இதனால், மாணவர்கள் சிறுநீரக தொற்று உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர் என, பெற்றோர் தரப்பில் அரசுக்கு புகார்கள் வந்தது.அதையடுத்து, கலெக்டர் அருண், குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய தலைவி தேவிப்பிரியா, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு உள்ளிட்ட அதிகாரிகள், புதுச்சேரியில் உள்ள 80-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் நிர்வாகிகளை அழைத்து, ஆலோசனை நடத்தினர்.அதில், அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பள்ளி வேலை நேரம் பின்பற்ற வேண்டும், மாணவர்கள் பள்ளிகளில் போதிய அளவில் தண்ணீர் அருந்தாததால், மாணவர்களின் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாவதாக டாக்டர்கள், பெற்றோர்கள் தெரிவித்தனர்.
மேலும் வீட்டிலிருந்து எடுத்து செல்லும் பாட்டிலில் உள்ள தண்ணீரை கூட குடிக்காமல் அப்படியே எடுத்து வருவதாகவும், அதற்கு பள்ளிகளில் தண்ணீர் குடிக்க அவகாசம் இல்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, நாௌான்றுக்கு நான்கு முறை மாணவர்கள் தண்ணீர் பருக வசதியாக தண்ணீர் அருந்த மணி (வாட்டர் பெல்) அடிக்க உத்தரவிட்டார். அதன்படி புதுச்சேரி பள்ளிகளில் 'வாட்டார் பெல்' திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.வாட்டார் பெல் திட்டம் அமல்படுத்துவதையொட்டி,சில தனியார் பள்ளிகள் விடும் நேரம் 10 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்கள் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

2 comments:

  1. எல்லாம் சரிதான் ,எல்லா குழந்தைகளும் ஒரே நேரத்தில் ஒன்னுக்க்கு ( யூரின்) போறதுக்கு போதுமான வசதி எந்தப்பள்ளியிலும் கிடையாது. அதனால் நூலின் இன்டர்வெலை ஒவ்வொரு ஸ்டேண்டர்டுக்கும் அடுத்தடுத்து வைக்க வேண்டும்.
    மேலும் பள்ளிகளில் உள்ள டாய்லெட்களை சுத்தமாக பராமரிக்கிறார்களா எனவும் பள்ளிக் கல்வித் துறை கண்காணிக்க வேண்டும்.
    இதில் லஞ்சம் புகுந்தால் பாதிக்கப் படுவது பிஞ்சுக் குழந்தைகளின் ஆரோக்கியமே என்பதை நிர்வாகமும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews