ஆழ்துளையில் விழுந்த குழந்தையை., அரை மணி நேரத்தில்.. தூக்க புதிய கருவி.! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 02, 2019

Comments:0

ஆழ்துளையில் விழுந்த குழந்தையை., அரை மணி நேரத்தில்.. தூக்க புதிய கருவி.!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து, 5 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் உலகத்தின் அனைத்து இடங்களில் இருக்கும் தமிழகர்களையும் சோகத்தில் மூழ்கடித்தது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அதிகபட்சமாக ரூ.1000 செலவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க அற்புதமான கருவி ஒன்றை கண்டறிந்துள்ளார். இந்த கருவியை கொண்டு கிணற்றில் விழுந்த குழந்தையை வெறும் அரை மணி நேரத்தில் மீட்டெடுக்கலாம் என்று அவர் செய்து காட்டி இருக்கின்றார்.
மதுரை மாவட்டத்தில் இருக்கும், மேலூர் அருகே ரெங்கசாமிபுரம் பகுதியை சேர்ந்த முருகன் என்ற மாணவர் சிறுவயதில் இருந்தே அறிவியல் கண்டுபிடிப்பில் மிகுந்த ஆர்வம் மிக்கவராக இருந்துள்ளார். சமீபத்தில் சுஜித் பலியானதை அடுத்து இதற்கு ஒரு கருவி கண்டுபிடிக்க வேண்டும் என தீவிரமாக முயற்சி செய்து கருவி ஒன்றினை கண்டுபிடித்து காட்டியுள்ளார்.
இக்கருவியை கொண்டு ஆழ்துளை கிணற்றில் விழுந்த அரை மணி நேரத்தில் குழந்தையை வெளியே எடுத்துவிடலாம் என்று கூறி இருக்கின்றார். மேலும், ஒரு குழந்தை எடை அளவில் இருக்கும் பொம்மையை குழிக்குள் இறக்கி தன்னுடைய கருவியின் மூலம் அந்த பொம்மையை வெளியில் தூக்கி காண்பித்துள்ளார். இந்த கருவியின் மூலம் 600 அடியில் குழந்தை விழுந்து இருந்தாலும் கூட எளிதாக மீட்டு விடலாம் என அவர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த கண்டுபிடிப்பை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews