??Join Our??WhatsApp??Group??Click Here
??Join Our??Telegram??Group??Click Here??Join Our??Facebook??Page??Click Here??Join Our??Twitter??Page??Click HereAdd 9361194452 To Ur Groups
இன்ஜினியரிங் மாணவர்களுக்கான, அண்ணா பல்கலையின், 'செமஸ்டர்' தேர்வில், மூன்றாம் முறையாக குளறுபடி நடந்துள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பில், தமிழகம் முழுவதும், 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் மற்றும் ஆர்கிடெக்ட் கல்லுாரிகள் செயல்படுகின்றன.
இவற்றில் தன்னாட்சி அந்தஸ்து இல்லாத, 400க்கும் மேற்பட்ட கல்லுாரிகளின் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு துறை, தேர்வுகளை நடத்தி, சான்றிதழ் வழங்குகிறது. தேர்வு கட்டுப்பாட்டு துறையில், ஏற்கனவே பல்வேறு முறைகேடுகள் நடந்ததால், அங்கு களையெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. பேராசிரியர் வெங்கடேசன் தேர்வு கட்டுப்பாட்டு பொறுப்பு அதிகாரியாக செயல்படுகிறார். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான, டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு, ஒரு வாரத்திற்கு முன் துவங்கியது. தேர்வு துவங்கிய முதல் நாளிலேயே, பிற்பகலுக்கான தேர்வின் வினாத்தாள், காலை நேர தேர்வில் மாற்றி வழங்கப்பட்டது. இந்த பிரச்னையால், பிற்பகல் தேர்வில் புதிய வினாத்தாள் வழங்கப்பட்டு, தேர்வு நடந்தது.
நவ., 9ல் நடந்த செமஸ்டர் தேர்வில், மருத்துவ எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில், 43 மதிப்பெண்களுக்கு, பாடத் திட்டத்துக்கு வெளியே கேள்விகள் இடம் பெற்றன. இதற்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நேற்று நடந்த தேர்விலும் குளறுபடி தொடர்ந்தது. சுற்றுச்சூழல் அறிவியல் பாடத்தில், 2017ம் ஆண்டு பாடத்திட்ட மாணவர்களுக்கு, ஐந்து கேள்விகளுக்கு, மதிப்பெண்கள் மாற்றி வழங்கப்பட்டிருந்தன.
வினாத்தாளில், பி -பிரிவில், மொத்தம் ஐந்து கேள்விகளுக்கு தலா, 13 மதிப்பெண் வழங்கப்படும் என, கூறப்பட்டிருந்தது. ஆனால், கேள்விகள்இடம் பெற்ற பகுதியில், ஒவ்வொரு கேள்விக்கும், தலா, 16 மதிப்பெண் வழங்கப்படும் என்று மாற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. எது சரியான மதிப்பெண் என, மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.ஒவ்வொரு நாளும் வினாத்தாளில் ஏற்படும் குளறுபடிகளால், மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
??Join Our??Facebook??Page??Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U