??Join Our??WhatsApp??Group??Click Here
??Join Our??Telegram??Group??Click Here??Join Our??Facebook??Page??Click Here??Join Our??Twitter??Page??Click HereAdd 9361194452 To Ur Groups
அரசு கல்லுாரி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, ஆராய்ச்சி படிப்பு தொடர்பான சான்றிதழ் வழங்குவதில், பல்கலைகள் அலட்சியமாக உள்ளன.
அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள, 2,331 உதவி பேராசிரியர் இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், பணி நியமன நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.இந்த பதவிக்கு விண்ணப்பம் அளிப்பவர்கள், தாங்கள் ஏற்கனவே பணிபுரிந்த கல்லுாரி அல்லதுபல்கலையில் அனுபவ சான்றிதழ் பெற்று, சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழை, பல கல்லுாரிகள் வழங்க மறுப்பதாக, தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.
இது குறித்து, அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, கல்லுாரி கல்வி இயக்குனர் ஜோதி வெங்கடேசன் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 'கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், தங்களிடம் பணியாற்றிய, தற்காலிக உதவி பேராசிரியர்கள், பணி அனுபவ சான்றிதழ் கேட்டால், தாமதமின்றி வழங்க வேண்டும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, புதிய பிரச்னையாக, ஆராய்ச்சி படிப்புக்கான தகுதி சான்றிதழை, பல்கலைகள் வழங்காமல் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து, வேலுார், திருவள்ளுவர் பல்கலையில் விண்ணப்பித்த பட்டதாரி ஒருவர் கூறுகையில், 'வரும், 15ம் தேதிக்குள், அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். 'ஆனால், ஆராய்ச்சி படிப்புக்கான தகுதி சான்றிதழும், அனுபவ சான்றிதழும் பெறுவதில், நெருக்கடியான நிலை உள்ளது' என்றார்.
??Join Our??Facebook??Page??Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U