பணியில் ஒழுக்கக்கேடு - ஊழியரை டிஸ்மிஸ் செய்தது செல்லும் - ஹைகோர்ட் உத்தரவு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 24, 2019

Comments:0

பணியில் ஒழுக்கக்கேடு - ஊழியரை டிஸ்மிஸ் செய்தது செல்லும் - ஹைகோர்ட் உத்தரவு!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஊழியர் ஒருவர் பணியில் இருக்கும்போது மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்று ஒழுக்கக் கேட்டில் ஈடுபட்டால் அவரை டிஸ்மிஸ் செய்வதே சரியானது என உத்தரவு.
பணி நேரத்தில் மாணவ, மாணவிகளிடமும், பயிற்சி மையத்திலும் ஒழுக்கக்கேடாக நடந்ததாக தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் ஊழியரை பணி நீக்கம் செய்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.சென்னையில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் மெஷின் மெக்கானிக்காக பணியில் கடந்த 1996ல் சேர்ந்தவர் சாம் ராஜா பிரபு. பின்னர் இவர் மெஷின் லேப் உதவியாளராக நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், மாணவ, மாணவிகளிடம் பயிற்சிக்கான துணிகளை கூடுதல் விலைக்கு வாங்க சொன்னதாகவும், வட மாநில தென்மாநில மாணவர்கள் என்ற பிரிவினையை ஏற்படுத்தியதாகவும், மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதையடுத்து, அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. மாணவ, மாணவிகள் உள்ளிட்டோரிடம் விசாரிக்கப்பட்ட நிலையில் அவரை பணி நீக்கம் செய்து நிர்வாகம் கடந்த 2002ல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அவர் மத்திய அரசு தொழில் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மத்திய அரசு தொழில் தீர்ப்பாயம், சாம் ராஜா பிரபு மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அவரை மீண்டும் பணியில் சேர்க்குமாறு கடந்த 2007ல் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பு வருமாறு:மாணவ, மாணவிகளிடம் நடத்தப்பட்டுள்ள விசாரணை ஆவணங்களை தாக்கல் செய்யப்பட்டுள்ன. மாணவிகள் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் விசாரணை அதிகாரி முடிவெடுத்துள்ளார். மொத்தமுள்ள 7 குற்றச்சாட்டுகளில் 2 குற்றச்சாட்டுகள் மட்டுமே நிரூபிக்கப்படவில்லை.
இதுபோன்ற ஒழுக்கக்கேடு புகாரின் மீது தொழில் தீர்ப்பாயம் எடுத்த முடிவை ஏற்க முடியாது. மாணவிகள் படிக்கும் ஒரு நிறுவனத்தில் இதுபோன்று நடத்தை கொண்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்வது தேவையில்லாதது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் மீது அளிக்கும் முடிவுகளுக்கான காரணங்களை தீர்ப்பாயம் தெரிவிக்காமல் தனது அதிகாரத்தின் அடிப்படையில் இரக்கம் காட்டுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. எனவே, தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews