👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
400 உதவி பொறியாளர்களை நியமனம் செய்வதற்கான, தேர்வு அறிவிப்பை வெளியிடாமல், தாமதம் செய்வதால், இன்ஜினியரிங் பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழக மின் வாரியத்தில், உதவி பொறியாளர், கள உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில், காலி பணியிடங்களின் எண்ணிக்கை, 50 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதனால், பணியில் உள்ளவர்களுக்கு, கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.இரு ஆண்டுகளாக, மின் வாரியத்தில், உதவி பொறியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு, எழுத்து தேர்வு வாயிலாக, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால், முறைகேடுகள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. மின் வினியோகம், மின் கட்டணம் வசூல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும், பிரிவு அலுவலகங்கள், உதவி பொறியாளரின் கீழ் செயல்படுகின்றன. அந்த அலுவலகங்களிலும், பொறியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. நடப்பாண்டில், 400 உதவி பொறியாளர்கள் பதவிக்கு, ஆட்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதற்கான அறிவிப்பை, முதல்வர் இ.பி.எஸ்., ஜூலையில் வெளியிட்டார். ஆனால், இதுவரை, தேர்வு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.இதனால், இன்ஜினியரிங் படிப்பு முடித்த பலரும், வாரிய அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
- நமது நிருபர் -
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U