போலீஸ் பணி தேர்வு - 3 திருநங்கையரை அனுமதிக்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 15, 2019

போலீஸ் பணி தேர்வு - 3 திருநங்கையரை அனுமதிக்க உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வுக்கு, மூன்று திருநங்கையரை அனுமதிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வில், துாத்துக்குடியை சேர்ந்த திருநங்கையர் சாரதா, தேன்மொழி, சென்னையை சேர்ந்த தீபிகா ஆகியோர் பங்கேற்றனர்.சாரதா, 32 ; தேன்மொழி, 3௦; தீபிகா, 32 மதிப்பெண் பெற்றனர். இவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள். இந்தப் பிரிவுக்கு நிர்ணயிக்கப்பட்ட, 44 மதிப்பெண் எடுக்காததால், உடல் தகுதி தேர்வுக்கு, இவர்களை அழைக்கவில்லை. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மூவரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை, நீதிபதி தண்டபாணி விசாரித்தார்.வரும், ௧௮ம் தேதி நடக்க உள்ள, உடல் தகுதி தேர்வில், மூன்று பேரையும் அனுமதிக்கவும், அவர்கள் பெற்ற மதிப்பெண்ணை, 'சீல்' இட்ட உறையில் தாக்கல் செய்யவும், சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு, நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, டிச., ௩க்கு தள்ளி வைத்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews