'ஸ்மார்ட்' விவசாயம்! வேளாண் பல்கலையில் புது திட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 31, 2019

Comments:0

'ஸ்மார்ட்' விவசாயம்! வேளாண் பல்கலையில் புது திட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
விவசாயிகளுக்கு பயன்படும் வகையில், ஆளில்லா குட்டி விமானம் பயன்பாட்டில் புதிய வரையறைகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதற்காக, 40 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய விமானங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளதாக, வேளாண் பல்கலை ஆராய்ச்சி இயக்குனர் சுப்பிரமணியம் தெரிவித்தார். பெரிய விழாக்கள், ஆடம்பர திருமணங்களில் நாம் இதுவரை பார்த்து வந்த, ஆளில்லா குட்டி விமானம்(ட்ரோன்), தற்போது விவசாய மேம்பாட்டுக்கு வேளாண் விஞ்ஞானிகளால் மாற்றியமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.விவசாயத்துறையில் கடும் சவாலாக உள்ள, ஆட்கள் பற்றாக்குறையை இதன் மூலம் சமாளிக்க இயலும். கண்காணிப்பு, பராமரிப்பு பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். புதிய விமானம் வாங்க ஒப்புதல்கோவை வேளாண் பல்கலையில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், மூன்று ஆளில்லா குட்டி விமானங்கள் உள்ளன. ஆராய்ச்சிகளை அதிகரிக்கும் நோக்கில், கூடுதலாக ஒரு செட் விமானம் கொள்முதல் செய்ய, பல்கலை நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. குட்டி விமானங்கள் எனினும், இதுசார்ந்த தொழில்நுட்பம் தெரியாதவர்கள் பயன்படுத்தினால், உயிரிழப்பு உள்ளிட்ட அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனை பயன்படுத்த, உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டியது கட்டாயம்.
இதனால், தமிழ்நாடு வேளாண் பல்கலை தரப்பில், ஆளில்லா குட்டி விமான பயன்பாடு தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள், விரைவில் வெளியிடப்படவுள்ளன.பல்கலையின் ஆராய்ச்சி இயக்கக இயக்குனர் சுப்பிரமணியம் கூறுகையில், ''ஆளில்லா குட்டி விமானத்தை, விவசாயத்துக்கு பயன்படுத்துவது குறித்து, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் சார்பில், வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.அவ்விதிகளை பின்பற்றி, தமிழக விவசாய மேம்பாட்டுக்கு ஏற்ப, தமிழ்நாடு வேளாண் பல்கலை வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்படவுள்ளன. இது தொடர்பான ஆராய்ச்சிகளை விரிவுபடுத்த தேவையான நவீன வசதிகளுக்கு, 40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.ஒரு வாகனத்தில், ஒரு செட் விமானங்களுடன் கிராமங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களுக்கு நேரில் சென்று பயன்படுத்தும் வகையில், புதிய விமானங்களை ஒரு மாதத்துக்குள் கொள்முதல் செய்யவுள்ளோம். இது தொடர்பான ஆராய்ச்சி பணிகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன,'' என்றார். கோவை வேளாண் பல்கலையில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், மூன்று ஆளில்லா குட்டி விமானங்கள் உள்ளன. ஆராய்ச்சிகளை அதிகரிக்கும் நோக்கில், கூடுதலாக ஒரு செட் விமானம் கொள்முதல் செய்ய, பல்கலை நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews