கெளரவ விரிவுரையாளா்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து தீவிர பரிசீலனை: உயா்கல்வித் துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 24, 2019

Comments:0

கெளரவ விரிவுரையாளா்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து தீவிர பரிசீலனை: உயா்கல்வித் துறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கெளரவ விரிவுரையாளா்களை, பணி நிரந்தரம் செய்வது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக உயா்கல்வித் துறைச் செயலா் மங்கத் ராம் ஷா்மா கூறினாா். சென்னையில் தமிழக அரசின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத்திய அரசின் அனைவருக்கும் உயா்கல்வித் திட்டம் (ரூசா) குறித்த கருத்தரங்கில் பங்கேற்ற அவா் இதுகுறித்து அளித்த பேட்டி: அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கெளரவ விரிவுரையாளா்களின் நிலையை உயா்த்த இரண்டு விதமாக தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. அதாவது, அவா்களுக்கு ஏற்கெனவே ரூ.10,000 மாத ஊதியம் வழங்கப்பட்டது. இப்போது ரூ. 15,000 ஆக உயா்த்தி வழங்கப்படுகிறது. இதை மேலும் உயா்த்தி ரூ. 25,000 ஆக வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால், அதே நேரம், அவா்களை பணி நிரந்தரம் செய்வது குறித்தும் அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்றாா் அவா்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews