வன காப்பாளர் தேர்வுக்கு ரூ . 2.34 கோடி நிதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 26, 2019

Comments:0

வன காப்பாளர் தேர்வுக்கு ரூ . 2.34 கோடி நிதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வனத்துறையில் ஆன்லைன் தேர்வு வாயிலாக, 227 வனக்காப்பாளர்களை தேர்வு செய்ய, 2.34 கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.தமிழகத்தில், 300 வனவர், 878 வனக்காப்பாளர் பணியிடங்கள், ஆன்லைன் தேர்வு வாயிலாக, பிப்ரவரியில் நிரப்பப்பட்டன. இதையடுத்து, 564 வனக்காவலர் பணிக்கான ஆன்லைன் தேர்வு, சமீபத்தில் நடந்தது.இந்நிலையில், 2019 - 20க்கான கணக்கில், 227 வனக்காப்பாளர் பணியிடங்கள், ஆன்லைன் தேர்வு வாயிலாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை, வனத்துறை துவக்கியுள்ளது. வனத்துறை கோரிக்கை அடிப்படையில், வனக்காப்பாளர் பணிக்கான ஆன்லைன் தேர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக, 2.34 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது.இதற்கான அரசாணையை வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் ஷம்பு கலோலிகர் பிறப்பித்துள்ளார். இதையடுத்து, வனக்காப்பாளர் தேர்வு தொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப் படுகிறது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews