அரசு திட்டங்களால் மாணவர்களின் சேர்க்​கை விகிதம் அதிகரிப்பு: முதலமைச்சர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 26, 2019

அரசு திட்டங்களால் மாணவர்களின் சேர்க்​கை விகிதம் அதிகரிப்பு: முதலமைச்சர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மாணவர்களின் கல்விக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். அரசு திட்டங்களால் மாணவர்களின் சேர்க்​கை விகிதம் அதிகரித்து வருகிறது எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். பின்னர் விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதன் காரணமாக மாணவர்களுடைய சேர்ப்பு விகிதம் அதிகரித்து இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாகவும் முதல்வர் பெருமிதத்துடன் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த 8 ஆண்டுகளில் 247 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும், ஆசிரியர்களுக்கு 29,891 மடிக்கணினிகள் வழங்க ரூ.37.81 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் குறிப்பிட்டார். கல்வி நிகழ்ச்சிகளைத் தயாரிக்க பிரத்தியோகமாக புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அரசு கேபிளில் 200வது அலைவரிசையில் கல்வித் தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அரசின் கல்வித் தொலைக்காட்சியில் 24 மணிநேரமும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews