👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மத்திய அரசின், கே.வி., பள்ளியில் நடந்த விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை.மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின், நேரடி கட்டுப்பாட்டில், கே.வி., எனும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன.சென்னை, கிண்டி, ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள, கேந்திரிய வித்யாலயா பள்ளியில், 55ம் ஆண்டு விழா, நேற்று கொண்டாடப்பட்டது.பள்ளி முதல்வர், மாணிக்கசாமி தலைமையில் நடந்த விழாவில், உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர், ஜெகதீஷ்குமார், கே.வி., பள்ளிகளின், சென்னை மண்டல துணை கமிஷனர், மணி பங்கேற்றனர்.சிறப்பு விருந்தினராக, தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் பங்கேற்றார்.இந்த விழாவிற்கான அழைப்பிதழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே அச்சடிக்கப்பட்டிருந்தது. தமிழில், அழைப்பிதழ் அச்சடிக்காததால், தமிழச்சி தங்கபாண்டியன், விழாவை புறக்கணிப்பார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றைய விழாவில், அவர் பங்கேற்றார்.விழா துவக்கத்தில் பாட வேண்டிய, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. அதற்கு கூட, எதிர்ப்பு தெரிவிக்காமல், தமிழச்சி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசினார்.கே.வி., பள்ளியில் நடந்த விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாததும், அது குறித்து, எம்.பி., கேள்வி கேட்காததும், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U