முதுகலை ஆசிரியர் தேர்வு செப் 27-ல் தொடங்கும்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 16, 2019

முதுகலை ஆசிரியர் தேர்வு செப் 27-ல் தொடங்கும்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான போட்டித் தேர்வு செப். 27 முதல் 29-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் முது நிலை பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமும், மீதி 50 சதவீதம் போட்டித் தேர்வு மூலமும் நிரப் பப்படுகின்றன. அதன்படி அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் 12-ம் தேதி வெளியிட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 24 முதல் ஜூலை 15-ம் தேதி அவ காசம் வழங்கப்பட்டது. இந்த தேர்வை எழுத மொத்தம் 1.85 லட் சம் பட்டதாரிகள் விண்ணப்பித் துள்ளனர். இந்நிலையில் முதுநிலை பட்ட தாரி ஆசிரியர் போட்டித்தேர்வு செப். 27 முதல் 29-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என்று அறி விப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரி யம் வெளியிட்ட செய்திக்குறிப் பில், “முதுநிலை ஆசிரியர் பணி களுக்கான தேர்வு இணையதளம் வழியாக செப்டம்பர் 27 முதல் 29-ம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 17 பாடங்கள் கொண்ட தேர்வுக்கால அட்டவணை தேர்வு வாரிய இணையத்தில் (http://trb.tn.nic.in/) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான ஹால்டிக்கெட் விரை வில் வெளியிடப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. முதுநிலை ஆசிரி யர் தேர்வு முதல் முறையாக இணையதளம் வழியாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள் கிரேட்-1 பணியிடங்களுக்கு நடத்தப்படும் போட்டித்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள் கிரேட்-1 பணியிடங்களில் புதிய நபர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 12ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கான கடைசிநாள் ஜூலை 15 என்று நிர்ணயிக்கப்பட்டது. அப்போது போட்டித்தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது. இதன்படி போட்டித்தேர்வுக்கான தேதிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் நேற்று வெளியிட்டது. அதன்படி இத்தேர்வுகள் அடுத்த மாதம் 27ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடக்கிறது. சம்மந்தப்பட்ட தேர்வு முற்றிலும் கணினி வழியாக நடத்தப்படவுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews