👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அடுத்த மாதம் 30-ந் தேதி நடைபெறவுள்ள சென்னை ஐ.ஐ.டி.பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். மக்களவை தேர்தலில் 2-வது முறையாக வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தது. மீண்டும் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு இன்னும் தமிழகம் வரவில்லை. முன்னதாக, நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் கோவை, தேனி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சென்னை ஐ.ஐ.டி. இந்த ஆண்டு வைர விழாவை கொண்டாடுகிறது. இதையொட்டி கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி பட்டமளிப்பு விழாவும் நடத்த ஐ.ஐ.டி. நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பிரதமரால் அந்த தேதியில் வர முடியாததால் பட்டமளிப்பு விழாவை ஐ.ஐ.டி. நிர்வாகம் ஒத்தி வைத்தது.
இந்நிலையில், செப்டம்பர் 30-ம் தேதி நடைபெறவுள்ள வைர விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐ.ஐ.டி. நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது. இந்த அழைப்பை ஏற்று செப்டம்பர் மாதம் 30-ந்தேதி பிரதமர் மோடி சென்னை ஐ.ஐ.டி. வருவதாக மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U