பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 11, 2019

பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், தங்கள் கல்வித் தகுதியை, வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்து, அடையாள அட்டை பெற, தமிழக அரசு வழி செய்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, இன்று மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மாணவர்கள், இன்று முதல், 24ம் தேதி வரை, இணையதளத்தில், ஒரே பதிவு மூப்பு அடிப்படையில், பள்ளிகளிலேயே, வேலை வாய்ப்புக்கு பதிவு செய்து கொள்ளலாம்.அதற்கான ஏற்பாடுகளை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து செய்துள்ளது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், தங்கள் கல்வித்தகுதியை, வேலைவாய்ப்பு துறையின்,www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில், தாங்களாகவே, ஆன்லைனில் பதிவு செய்யலாம். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்றும் பதியலாம்.ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, ஜாதி சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் விபரங்களுடன், பள்ளிகளை அணுகி, மாணவ, மாணவியர் பதிவு செய்யலாம். 'பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும், இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர், ஜோதி நிர்மலாசாமி, மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews