சென்னையில் பள்ளி மாணவர்களை நண்பர்களாக மாற்றும் போலீசார்: குற்றங்களை குறைக்க புதிய முயற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 26, 2019

சென்னையில் பள்ளி மாணவர்களை நண்பர்களாக மாற்றும் போலீசார்: குற்றங்களை குறைக்க புதிய முயற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னையில் திரும்பிய திசை எங்கும் வழிப்பறி, செயின் பறிப்பு என்றிருந்த நிலை போலீசாரின் கெடுபிடியாலும், கண்காணிப்பு கேமராக்களின் உதவியாலும் தற்போது பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் குற்றங்களை குறைக்க போலீசார் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதற்கு போலீஸ் ஸ்டுடென்ட் கேடட் என்று பெயரிட்டுள்ளனர். அதாவது இருதரப்பினருக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் வகையிலும், காவல்துறையினரை நன்பர்களாக மாற்றும் வகையிலும் மாணவர்களிடம் நெருக்கமாக இருப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்கிறார் சென்னை பூக்கடை சரக உதவி ஆணையர் லக்சுமணன்.
இதை தொடர்ந்து போலீசாரின் இந்த முயற்சிக்காக அரசு தரப்பில் இருந்து ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 50 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வளரும் இளம் பருவத்தில் உள்ள 8 மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் காவல்துறையினர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த போலீசார் முயற்சித்து வருவதாகவும் லக்சுமணன் தெரிவித்தார். இதற்காக சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் குற்றங்கள் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுப்பது குறித்து காவல்துறையினர் பேசி கொண்டிருக்கும் போதே பள்ளிக்கு மிக அருகில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாகவும் அதனை தனது சக நண்பர்கள் பயன்படுத்துவதாகவும் மாணவர் ஒருவர் தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் பெட்டிக்கடையில் வைத்திருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர் முத்துவையும் அவருக்கு பொருட்களை வழங்கிய ஆர்.கே நகரை சேர்ந்த மணிமாறன் என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஆர்.கே நகரில் மறைத்து வைக்கப்பட்ட 2 மூட்டை புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். போலீசாரின் இது போன்ற முயற்சியால் குற்றங்கள் குறைவது மட்டுமல்லாமல் காவல்துறையினர் குறித்த தேவையற்ற அச்சமும் மாணவர்களிடம் நீங்கி இருதரப்பினருக்கும் இடையே புதிய உறவு ஏற்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews