அண்ணா, காமராஜர் பல்கலை உள்பட 308 நிறுவனங்கள் கணக்கு தாக்கல் செய்யவில்லை: தணிக்கை துறை அறிக்கையில் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 26, 2019

அண்ணா, காமராஜர் பல்கலை உள்பட 308 நிறுவனங்கள் கணக்கு தாக்கல் செய்யவில்லை: தணிக்கை துறை அறிக்கையில் தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் போன்ற அரசு உதவி பெறும் 308 நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் ஆண்டு கணக்குகளை அனுப்பவில்லை என்று இந்திய தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் கடமைகள் அதிகாரங்கள் மற்றும் பணிமுறைகள் சட்டத்தின் கீழ் அரசு உதவி பெறும் நிறுவனங்கள் தணிக்கை செய்யப்படுகிறது. எனவே தணிக்கைக்கு உள்ளாகும் நிறுவனங்களின் மொத்த செலவுகள், அளித்த நிதி உதவிகள் ஆகிய விபரங்களை ஒவ்வொரு ஆண்டும் துறை தலைவர்கள் தணிக்கை அளிக்க வேண்டும். ஆனால் அண்ணா பல்கலைக்கழகம் 2013-14 முதல் 2017-18 வரையும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 2015-16 முதல் 2017-18 வரையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் 2013-14 முதல் 2017-18 வரை என தமிழகத்தின் முக்கிய பல்கலைக்கழகங்கள் ஆண்டு கணக்குகளை தாக்கல் செய்யவில்லை.
அதே போன்று அனைவருக்கும் கல்வி திட்டம் தொடர்பாக பெரும்பான்மையான மாவட்டங்கள் தணிக்கை துறைக்கு கணக்குகள் ஒப்படைக்கவில்லை. சம்பளம், பராமரிப்பு போன்றவற்றிக்காக அரசு உதவித்தொகை பெரும் கல்வி நிறுவனங்களே பெரும்பாலும் ஆண்டு கணக்குகளை அனுப்ப தவறி உள்ளதாக தணிக்கை துறை தலைவர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஓராண்டு கணக்குகள் அளிக்காத தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளாக 83ம், ஓராண்டிற்கு மேல் மூன்றாண்டுகள் வரை 70 நிறுவனங்களும், மூன்றாண்டுகளுக்கு மேல் 5 ஆண்டு வரை 44 நிறுவனங்களும், 5 ஆண்டுகள் அதற்கு மேலும் என்ற வகையில் 111 நிறுவனங்கள் கணக்குகளை தணிக்கைக்கு அளிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews