புதிய கல்விக்கொள்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரி எம்.பி.க்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அழைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 31, 2019

புதிய கல்விக்கொள்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரி எம்.பி.க்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அழைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதிய கல்வி வரைவு கொள்கையை மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் வெளியிட்டது. பதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டது.இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின் 3 வது மொழியாக இந்தி பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் திருத்தப்பட்ட வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனாலும் புதிய கல்வி வரைவு கொள்கையை நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.குறிப்பாக தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
பின் கல்விக்கொள்கை தொடர்பாக கருத்து கூற அவகாசம் வழங்க கோரி தமிழக தலைவர்கள் மற்றும் அமைப்புகள் கோரிக்கை விடுத்ததால் மத்திய அரசு அவகாசத்தை கூட்டி உத்தரவு பிறப்பித்தது.ஜூலை 31-ஆம் தேதியுடன் அவகாசம் முடிய உள்ள நிலையில் தற்போது ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் நாளை ஆலோசனை நடைபெற உள்ளது. புதிய கல்விக்கொள்கை குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி எம்.பி.க்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews