👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கால்நடை மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க, பழங்குடியின மாணவருக்கு, அழைப்பு கிடைக்காதது குறித்து பதிலளிக்கும்படி, கால்நடைத்துறை செயலர் பதிலளிக்க, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைக்கு உட்பட்ட சுண்டபோடு கிராமத்தை சேர்ந்தவர், சந்திரன். பழங்குடியின மாணவரான இவர், பிளஸ் 2ல், வேளாண் தொழிற்பாடப் பிரிவில் படித்து, 444 மதிப்பெண் பெற்றார்.கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தார். பழங்குடி இனத்தவருக்கான தரவரிசை பட்டியலில், முதலிடம் பிடித்தார். ஆனால், அவருக்கான, அழைப்பு கடிதம் இணையதளத்தில் கிடைக்கவில்லை.இதுகுறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.
ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன், &'மாணவருக்கு அழைப்பு கிடைக்காதது குறித்து, கால்நடைத்துறை முதன்மை செயலர், கால்நடை மருத்துவ பல்கலை துணைவேந்தர் ஆகியோர், இரண்டு வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்&' என, உத்தரவிட்டார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U