👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஈரோடு மாவட்டத்தில் உள்ள, அரசு துவக்கப் பள்ளியில் படிக்கும் சிறார்கள், உண்டியலில் பணம் சேமித்து, பிறருக்கு உதவி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே, கே.ராமநாதபுரத்தில் உள்ள, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 35 குழந்தைகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியை, வாசுகி மற்றும் இரு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.உதவும் மனப்பான்மையை, மாணவர்களிடம் விதைக்க, தலைமை ஆசிரியை, வாசுகி, வித்தியாச முயற்சி மேற்கொண்டுள்ளார். 2009 முதல், பள்ளியில் உண்டியல் வைத்து, பிறருக்கு உதவ, குழந்தைகளிடம் பணம் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தினமும், இறைவணக்க கூட்டத்தின்போது, உண்டியலை எடுத்து வைக்கின்றனர். கூட்டம் முடியும்போது, நாணயம் மற்றும் பணம் வைத்திருக்கும் குழந்தைகள், தானே முன்வந்து, தன் பெயர் மற்றும் வகுப்பை கூறி, அதை, உண்டியலில் போடுகின்றனர்.ஆண்டுக்கு ஒருமுறை, அந்த உண்டியலை திறந்து, பொது சேவை காரியங்களுக்கு பயன்படுத்துகின்றனர்.
இது குறித்து, தலைமை ஆசிரியை, வாசுகி கூறியதாவது:கடந்த, 2009ல், நீதிநெறிக்கதை வகுப்பில், 'பிறருக்கு, நாங்களும் உதவுகிறோம்' என, குழந்தைகள் கூறினர். அப்போது தான், உண்டியலில் பணம் சேமிக்கும் யோசனை தோன்றியது.குழந்தைகள் தாங்களே, தகர டப்பாவை துளையிட்டு, உண்டியலாக வடிவமைத்து, சில்லரை காசுகளை போட்டு வருகின்றனர். 10 ஆண்டுகளாக, உண்டியலில் சேகரித்த பணத்தை, பிறருக்கு உதவும் வகையில் பயன்படுத்தி உள்ளோம். இதற்காக, பதிவேடும் பராமரித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
கொடுத்து சிவக்கும் பிஞ்சு கரங்கள்
மாணவர்கள் தங்கள் உண்டியல் சேமிப்பு பணத்தில், கோபி, அன்னை இல்லத்துக்கு, பீரோ மற்றும் மின்விசிறி வழங்கியுள்ளனர்.கடந்த, 2015ல், கடலுாரில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 2,000 ரூபாய் நிதி; 2016ல், சென்னையில், விபத்தில் சிக்கி நினைவிழந்த பள்ளி மாணவிக்கு, 500 ரூபாய்; மலைவாழ் அனாதை குழந்தைகள், சிலேட் மற்றும் பென்சில் வாங்க, 500 ரூபாய் வழங்கியுள்ளனர். சமீபத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, கேரளா மக்களுக்கு, 1,000 ரூபாய் வழங்கியுள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U