ரோடு போடல, லேப்டாப் கொடுக்கல; கேட்ட நிதியில்லை என புலம்பல் கல்வி, நெடுஞ்சாலை, உள்ளாட்சிகளின் 11 ஆயிரம் கோடி பயன்படுத்தவில்லை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 26, 2019

ரோடு போடல, லேப்டாப் கொடுக்கல; கேட்ட நிதியில்லை என புலம்பல் கல்வி, நெடுஞ்சாலை, உள்ளாட்சிகளின் 11 ஆயிரம் கோடி பயன்படுத்தவில்லை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 ஆயிரத்து 938 கோடி பயன்படுத்தப்படாமல் அரசு நிதி துறையிடம் ஒப்படைப்பு செய்துள்ளதாக இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையால் பல திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என்று அரசு தெரிவித்து வரும் நிலையில் 10,938 கோடி வளர்ச்சி திட்டங்களுக்கு உரிய முறையில் பயன்படுத்தப்படாமல் நிதி துறையிடம் ஒப்படைப்பு செய்யப்பட்டு இருப்பது தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதாவது, 2016-18ம் ஆண்டில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 801 கோடி மானியங்களாகவும், நிதி ஒதுக்கங்களாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 622 கோடி ரூபாய் துறைகள் சார்ந்து செலவு செய்யப்பட்டுள்ளது. இதுபோக 28,179 கோடி பயன்படுத்தப்படாமல் மீதம் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த சூழலில் நிதியாண்டின் கடைசியில் 10 ஆயிரத்து 938 கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் நிதி துறையிடம் ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஊரக வளர்ச்சி மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள், நிதி, பள்ளி கல்வி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், பாசனம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் மற்றும் எரிசக்தி ஆகிய துறைகள்தான் மற்ற துறைகளுகளோடு ஒப்பிட்டு பார்க்கையில் நிதி பயன்படுத்தாமல் மீதமாகி ஒப்படைப்பு செய்ததும் தணிக்கையில தெரியவந்துள்ளது. இதேபோல 2012-17ம் ஆண்டுகளில் மிகை செலவினமாக 1,099 கோடி முறைப்படுத்தப்படாமல் உள்ளது. இது மாநில சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட மானியத்தை விட மீண்டும் மீண்டும் மிகை செலவினம் செய்யப்படுள்ளதால் ஏற்பட்டுள்ளதாகவும், இது ஜனநாயக அடிப்படை கொள்கையை மீறியதும் என்று தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி மேலாண்மை வரவு செலவு திட்ட கட்டுப்பாடு என்பது நிதி கட்டுப்பாடு இல்லாததையும் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தணிக்கை அறிக்கையில் 10 ஆயிரத்து 938 கோடி பணம் திருப்பி அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணத்தை வைத்து மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள், தரமான சாலைகள், நகரம், கிராமங்களில் தண்ணீர்,சுகாதார வசதிகளை மேம்படுத்தி இருக்கலாம். ஆனால் அரசிடம் திட்டங்கள் இல்லாத காரணத்தால் இந்த பணம் வீணாகியதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews