👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உத்தர பிரதேச மாநிலம் சிதாபூர் மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவியை அவரது உறவினர்களும், ஆசிரியரும் கடந்த 2 ஆண்டுகளாக கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி பள்ளியில் நன்றாக படித்து வந்தார். இது அவரது உறவினர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் ஆசிரியருடன் சேர்ந்து அந்த மாணவியை கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.
மேலும் அந்த மாணவியை கற்பழிக்கும்போது எடுத்த வீடியோ வைத்து மிரட்டி வந்தனர். பாதிக்கப்பட்ட அந்த மாணவி இது குறித்து போலீசிடம் முறையிட்டபோது அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே மாணவி பற்றிய வீடியோ கடந்த வெள்ளிக்கிழமை வாட்ஸ் ஆப்பிள் வெளியானதால் போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதுவன் குமார் சிங் கூறியதாவது; மாணவியுடன் அந்த பள்ளியில் படிக்கும் உறவினரான சீனியர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் கும்பலாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஆசிரியர், மாணவியின் உறவினர்கள் 4 பேர் மீது போக்சா சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், நான்கு பேர் தலைமறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U