நாகை, திருச்சியில் அமைச்சர்களை முற்றுகையிட்ட மாணவர்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 30, 2019

நாகை, திருச்சியில் அமைச்சர்களை முற்றுகையிட்ட மாணவர்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருச்சி, நாகையில் லேப்டாப் கேட்டு அமைச்சர்களை மாணவர்கள் முற்றுகையிட்டனர். நாகை வெளிப்பாளையம் நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நேற்று நடந்தது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன் லேப்டாப்களை வழங்கினார்.விழா முடிந்து புறப்பட்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் காரை தடுத்து நிறுத்தி, மாணவிகள் முற்றுகையிட்டனர். கடந்த கல்வி ஆண்டில் படித்த 500க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இதுவரை லேப்டாப் வழங்கவில்லையே என கேள்வி எழுப்பினர். இதைகேட்ட அமைச்சர் 1ம் தேதிக்குள் உங்களுக்கு லேப்டாப் கிடைத்துவிடும். இல்லை என்றால் எனது செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவியுங்கள் என்று கூறி செல்போன் நம்பரை மாணவிகளிடம் கொடுத்துவிட்டு காரில் புறப்பட்டு சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.வெல்லமண்டி நடராஜன், வளர்மதி: திருச்சி ரங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள் ெவல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர். தகவலறிந்த முன்னாள் மாணவர்கள், தங்களுக்கும் லேப்டாப் வழங்க வலியுறுத்தி ரங்கம் அரசு அமைச்சர்களை முற்றுகையிட்டனர். மாணவிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். விழா முடிந்து வந்த அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் விரைவில் லேப்டாப் தரப்படும் என கூறி சமாதானப்படுத்தி அனுப்பினர்.சீர்காழியில் எம்எல்ஏ முற்றுகை: சீர்காழி ச.மு.இ மேல்நிலைப் பள்ளியில் நேற்று பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப் படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையறிந்த 2017-18, 2018-19ல் பல்வேறு பள்ளிகளில் படித்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்குவந்து எம்எல்ஏ பாரதியை முற்றுகையிட்டு என மனு அளித்தனர்.
அமைச்சர் வீரமணியை முற்றுகையிட வந்த மாணவர்கள் விரட்டியடிப்பு:வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நேற்று நடந்தது. அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினார். அவரை முற்றுகையிட முன்னாள் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் குவிந்தனர். இதையறிந்த போலீசார் மாணவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். 7 மாணவர்களை மட்டும் அதிகாரிகளிடம் மனு அளிக்க அனுமதித்தனர்.திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மானாமதுரை அதிமுக எம்எல்ஏ நாகராஜன், லேப்டாப்களை வழங்கினார். முன்னாள் மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் அவரை முற்றுகையிட்டனர். அவர்களிடம் ‘‘கல்வித்துறை அமைச்சரிடம் பேசி 2 மாதத்தில் பெற்று தரப்படும்’’ என்று கூறிவிட்டு எம்எல்ஏ சென்றார். கீழடியிலும் போராட்டம்: கீழடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன் சென்றபோது அவரை முற்றுகையிட கீழடி பஸ் ஸ்டாப் அருகே முன்னாள் மாணவர்கள் காத்திருந்தனர். போலீசார் அவர்களை மிரட்டி, எம்எல்ஏவை நெருங்க விடாமல் பாதுகாப்பாக நின்றனர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன் நேற்று திரண்டிருந்த முன்னாள் மாணவர்கள் லேப்டாப்கள் வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்யாறு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன் 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவிகள் லேப்டாப் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews