👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
திருக்கோவிலுாரில் ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது கோபுர வீதி கடை வீதிகளில் சாலையோர காய்கறிக் கடைகள் அகற்றப்பட்டன. பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மாற்று இடம் வழங்க வேண்டும்; அதுவரை இந்த இடத்திலேயே கடை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
வருவாய்த்துறை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் நடைபாதை வாசிகளுக்கு இடையூறாக சாலையில் கடை வைக்க அனுமதிக்க முடியாது. தேவையானால் பேரூராட்சி அலுவலகத்துக்கு எதிரில் தற்காலிகமாக ஒதுக்கப்படும் இடத்தில் காய்கறி மார்க்கெட் அமைத்துக் கொள்ளுமாறு, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்காத காய்கறிக் கடைக்காரர்கள் கடந்த ஜூலை 17-ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தினர். ஆனாலும் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாததால் திருக்கோவிலூர் எம்ஜிஆர் காய்கனி வியாபாரிகள் நல சங்கத்தினர், மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக நகரில் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்புதிருக்கோவிலூர் அருகே யுள்ளது பில்ராம்பட்டு கிராமம். இக்கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்காக 10 சதவீத பங்கு தொகையை செலுத்துமாறு கல்வித்துறை கிராம மக்களை கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில் கடந்த 2014 ம் ஆண்டு ரூ 1 லட்சம் செலுத்தப்பட்டது. 4 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் அந்தப் பள்ளியின் தரம் உயர்த்தப்படவில்லை. பலமுறை மாவட்ட கல்வி அலுவலகத்தில் முறையிட்டும் பயனில்லை.
இதனால், மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க இக்கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக பில்ராம்பட்டு கிராம மக்கள், விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் சுப்பிரமணியத்திற்கு கிராம மக்கள் கையெழுத்திட்ட கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்