👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், நீட் நுழைவுத் தேர்வு, முக்கிய இடம் பிடித்து உள்ளது. மருத்துவ படிப்பில் சேருவதற்கான, தகுதி தேர்வாக, இதை நடத்த வேண்டும் என்ற, மத்திய அரசின் முடிவுக்கு, தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருந்தும், நீட் தேர்வுப்படி தான், தற்போது மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடந்துவருகிறது.
&'நீட்&' நுழைவு தேர்வு ரத்து அறிவிப்பு சாத்தியமானதா, இல்லையா என்பது பற்றி, சட்டம் படித்த வழக்கறிஞர்களின் கருத்து இதோ:
மூத்த வழக்கறிஞரும், முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரலுமான, பி.வில்சன்: மருத்துவ கவுன்சில் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட, புதிய பிரிவால், நீட் தேர்வு அமலுக்கு வந்தது. இந்தப் பிரிவை நீக்கி விட்டால், நீட் தேர்வும் போய் விடும்.&'மாடர்ன் டெண்டல் கல்லுாரி&' வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, மிகவும் முக்கியமானது. மாணவர்கள் சேர்க்கை நடத்த, மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதை, அந்த உத்தரவு வலியுறுத்துகிறது.
மத்திய அரசு வழக்கறிஞரான, உதவி சொலிசிட்டர் ஜெனரல், ஜி.கார்த்திகேயன்: திருத்த சட்டத்தை ஏற்படுத்தி, நீட் தேர்வு இல்லாமல் ஆக்கலாம். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்வது, தகுதி உள்ள மாணவர்களுக்கு பயன் அளிக்காது. நீட் இருந்தால் தான், தகுதியானவர்களுக்கு இடம் கிடைக்கும்; தகுதியற்றவர்கள், மருத்துவ படிப்பில் நுழைய முடியாது. அதனால், நீட் கண்டிப்பாக வேண்டும்.
பழைய முறையை பின்பற்றினால், ஏழை எளிய மாணவர்களுக்கு, தனியார் மருத்துவ கல்லுாரிகளில் இடம் கிடைப்பது என்பது, அபூர்வமாகி விடும்.அதுவே, நீட் இருந்தால், திறமையான, தகுதியான ஏழை மாணவர்களுக்கு, கண்டிப்பாக மருத்துவ, &'சீட்&' கிடைக்கும். நீட் இல்லை என்றால், தகுதி இருந்தும், பண வசதி இல்லாத மாணவர்களுக்கு, &'சீட்&' கிடைப்பது அரிது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்