ஸ்கூட்டர் மீது பேருந்து மோதி 5-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 04, 2019

ஸ்கூட்டர் மீது பேருந்து மோதி 5-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

கே.கே.நகரில் ஸ்கூட்டர் மீது பேருந்து மோதிய விபத்தில் 5-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.

சென்னை அசோக் நகர் 90-வது தெருவில் வசிப்பவர் ராஜன். மருந்தகம் வைத்துள்ளார். இவரது மகன் சாய் சூர்யா(11). அசோக் நகர் ஜவஹர் வித்யாலயா பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலையில் பள்ளி முடிந்து டியூசன் செல்ல சாய் சூர்யா புறப்பட்டார். ராஜனிடம் வேலை பார்ப்பவர், ஸ்கூட்டரில் சாய் சூர்யாவை அழைத்துச் சென்றார். கே.கே.நகர்காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கே.கே.நகரில் இருந்து பாரிமுனை செல்லும் 14டி பேருந்து ஸ்கூட்டரின் கைப்பிடியில் உரசியது.
இதில் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்திருந்த சாய் சூர்யா நிலைதடுமாறி சாலையில் விழ, அவர் மீது பேருந்தின் முன் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சாய் சூர்யா பரிதாபமாக இறந்தார். சம்பவ இடத்துக்கு வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், சாய் சூர்யாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை ஆக்கிரமிப்பு:

கே.கே.நகரில் காமராஜர் சாலையிலும், எம்.ஜி.ஆர் சாலையிலும் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வியாபாரிகளும் பாதி இடத்தை ஆக்கிரமித்து விடுகின்றனர். இதனால் சாலை அளவு குறுகி, வாகனங்கள் செல்ல வசதியின்றி அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே, அந்த சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாகும்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews