👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 29ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடைந்ததை அடுத்து விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு விடைத்தாள் திருத்தும் பணிக்காக நிலுவைத் தொகையை அரசு இன்னும் வழங்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
முதன்மை கல்வி அலுவலர் தலையிட்டு நிலுவைத் தொகையை வழங்கினால் மட்டுமே விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடப்போவதாக அவர்கள் கூறினர். இந்த போராட்டத்தால் விடைத்தாள் திருத்தும் பணி சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேல் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொண்டனர். எனினும் ஆசிரியர்களின் இத்தகைய புறக்கணிப்புப் போராட்டம் தொடர்ந்தால் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்