உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற தகுதிவாய்ந்தவர்கள் பட்டியல் விவரம் அனுப்ப அரசு உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 13, 2019

உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற தகுதிவாய்ந்தவர்கள் பட்டியல் விவரம் அனுப்ப அரசு உத்தரவு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியான ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியலை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தகுதியான ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களின் பெயர்,தரவரிசை எண் உள்ளிட்ட விபரங்களை அனுப்ப அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியான விதிமுறைகளையும் பள்ளிக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
அவற்றின் படி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு, 2001 முதல் 2003 வரை உள்ள ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களே பதவி உயர்வு பெற தகுதியானவர்கள் ஆவர்.மேலும், கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள், இதற்கு முன்புதலைமையாசிரியர் பதவிக்கு தகுதி பெறாமல், தற்போது 2019 ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி தகுதி உடையவர்களின் பெயர்களை பதவி உயர்விற்கு முதன்மைக்கல்வி அலுவலர்கள் பரிந்துரை செய்யவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு, 2012 மற்றும் 2013-ம் ஆண்டின் படி, பணி வரன்முறை செய்யப்பட்டு, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவோ, அல்லது உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாவோ தகுதி பெறாதவர்களின் பெயர்களை 2019 ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி இனம் கண்டு, பரிந்துரைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களின் பெயர்களை பரிந்துரைக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களின்பெயர்களை, முதன்மைக்கல்வி அலுவலர்களே நேரிடையாக ஆய்வு செய்து, அடையாளம் கண்டு சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக தற்போது பணியாற்றுபவர்கள், மாவட்டக்கல்வி அலுவலர் அல்லது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் என்ற எதேனும் ஒன்றிற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews