மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 22, 2018

மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம்

ஐந்து மாநகராட்சி பள்ளிகளில், தலைமையாசிரியர் பணியிடங்கள் உட்பட, 16 காலியிடங்கள் நிரப்பப்பட்டன.கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில், 83 பள்ளிகள் உள்ளன. இதில், அனுப்பர்பாளையம், மணியகாரம்பாளையம், ஆர்.எஸ்.புரம் காதுகேளாதோர் பள்ளி, வரதராஜபுரம் மற்றும் செல்வபுரம் பெண்கள் உயர்நிலைப்பள்ளிகளில், கடந்த இருஆண்டுகளுக்கும் மேலாக, தலைமையாசிரியர் பணியிடம் காலியாக இருந்தது. கல்வி மற்றும் நிர்வாகப்பணிகள் பாதிக்கப்பட்டன.
இது குறித்து,'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, பதவி உயர்வுக்கு தகுதியுள்ளோர் பட்டியல் தயாரித்து, காலியாக இருந்த தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. மேலும், ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளுக்கு, ஒரு உடற்கல்வி இயக்குனர் காலியிடம் மற்றும் பத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதாக, ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இதேபோல் விரைவில், பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களையும் நிரப்பினால், பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்துவதில், சிக்கல் இருக்காது என்கின்றனர் தலைமை ஆசிரியர்கள்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews