உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 23 (November 23 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 23, 2018

உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 23 (November 23 )




நவம்பர் 23 (November 23 ) கிரிகோரியன் ஆண்டின் 327 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 328 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 38 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
800 – திருத்தந்தை மூன்றாம் லியோ இழைத்தாகக் கருதப்படும் குற்றங்களை விசாரணை செய்ய மன்னன் சார்லெமான் ரோம் வந்து சேர்ந்தான்.
1174 – சலாகுத்தீன் திமிஷ்குவைக் கைப்பற்றினார்.
1248 – மூன்றாம் பேர்டினண்ட் மன்னனின் படையினர் செவீயா நகரைக் கைப்பற்றினர்.
1499 – இங்கிலாந்தின் அரசாட்சிக்கு உரிமை கோரிய பேர்க்கின் வோர்பெக் லண்டன் கோபுரத்தில் இருந்து தப்பியோட முயல்கையில் கைதாகி தூக்கிலிடப்பட்டான். இவன் 1497 இல் இங்கிலாந்தின் நான்காம் எட்வேர்டின் மகன் என உரிமை கோரி இங்கிலாந்தை முற்றுகையிட்டவன்.
1510 – இமெரெட்டி இராச்சியம் மீதான (இன்றைய மேற்கு ஜோர்ஜியா) உதுமானியரின் முதலாவது தாக்குதல் ஆரம்பித்தது. உதுமானியப் படைகள் தலைநகர் குத்தாயிசியைக் கைப்பற்றினர்.

1867 – இரண்டு அயர்லாந்தர்களைச் சிறையிலிருந்து வெளியேற்ற உதவியமைக்காக மூன்று அயர்லாந்துத் தேசியவாதிகள்
இங்கிலாந்து , மான்செஸ்டரில் தூக்கிலிடப்பட்டனர்.
1890 – நெதர்லாந்து மன்னன் மூன்றாம் வில்லியம் ஆண் வாரிசு இல்லாமல் இறந்தான். அவனது மகள் இளவரசி வில்லெல்மினா அரசியாவதற்கு ஏதுவாக சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
1910 – சுவீடனில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1914 – மெக்சிக்கோ புரட்சி: கடைசி அமெரிக்கப் படைகள்
மெக்சிக்கோவின் வெரக்குரூசு நகரில் இருந்து வெளியேறியது.
1924 – அந்திரொமேடா "நெபுலா" உண்மையில் நமது பால் வழிக்கு வெகுதூரத்தேயுள்ள பிறிதொரு
விண்மீன் பேரடை என்ற எட்வின் ஹபிளின் கண்டுபிடிப்பு, முதற்தடடையாக நியூயார்க் டைம்சில் வெளியிடப்பட்டது.
1939 – இரண்டாம் உலகப் போர் :
ராவல்பிண்டி என்ற பிரித்தானியக் கப்பல் செருமனியப் போர்க் கப்பல்களினால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்:
உருமேனியா அச்சு அணி நாடுகளுடன் இணைந்தது.
1943 – இரண்டாம் உலகப் போர்: தரவா , மாக்கின் பவளத் தீவுகள் அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்தன.
1946 – வியட்நாம், ஆய் பொங் நகர் மீது பிரெஞ்சுக் கடற்படைகள் குண்டுத்தாக்குதல் நடத்தியதில் ஆயிரத்துக்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
1955 – கொக்கோசு (கீலிங்) தீவுகள்
ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து
ஆத்திரேலியாவுக்கு கைமாறியது.
1959 – பிரெஞ்சு அரசுத்தலைவர்

1971 – சீனப் பிரதிநிதிகள் முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் அவையில் சீனாவுக்காகப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
1974 – எத்தியோப்பியாவில் அரசியல்வாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உட்பட 60 பேர் இடைக்கால இராணுவ அரசினால் படுகொலை செய்யப்பட்டனர்.
1978 – கிழக்கு மாகாண சூறாவளி, 1978 : இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வீசிய கடும் புயலில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1979 – மவுண்ட்பேட்டன் பிரபுவைக் கொலை செய்த குற்றத்துக்காக
ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தொமஸ் மக்மாகன் என்பவருக்கு டப்ளினில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
1980 – தெற்கு இத்தாலியில் இடம்பெற்ற 6.9 அளவு
நிலநடுக்கத்தினால் 4,800 பேர் வரை உயிரிழந்தனர்.
1985 – எகிப்தியப் பயணிகள் விமானம்
கிரேக்கத்தில் இருந்து புறப்படும்போது கடத்தப்பட்டு
மால்ட்டாவில் தரையிறக்கப்பட்ட போது எகிப்தியப் படைகள் விமானத்தைச் சுற்றி வளைத்தனர். முடிவில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
1990 – ஈழப்போர்: தமிழீழ விடுதலைப் புலிகள் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்தி அதனை முழுமையாகக் கைப்பற்றினர்.
1992 – முதலாவது திறன்பேசி,
ஐபிஎம் சைமன், லாஸ் வேகஸ் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1996 – எதியோப்பிய விமானம் கடத்தப்பட்டு எரிபொருள் முடிந்த நிலையில் இந்து மாகடலில்
கொமொரோசு அருகில் வீழ்ந்ததில் 125 பேர் உயிரிழந்தனர்.
2001 – கணினி குற்றம் தொடர்பான சாசனம் புடாபெஸ்ட் நகரில் கையெழுத்திடப்பட்டது.

2003 – வாரக்கணக்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து
ஜோர்ஜிய அரசுத்தலைவர்
எதுவார்து செவர்துநாத்சே பதவி விலகினார்.
2005 – லைபீரியாவின் தலைவராக
எலன் ஜான்சன் சர்லீஃப் தெரிவு செய்யப்பட்டார். ஆப்பிரிக்க நாடொன்றின் முதலாவது பெண் தலைவர் இவராவார்.
2006 – ஈராக்கில் சாதிர் நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 125 பேர் கொல்லப்பட்டு 257 பேர் காயமடைந்தனர்.
2007 – அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது
2007 – அர்கெந்தீனாவுக்குத் தெற்கே
எக்சுபுளோரர் என்ற பயணிகள் கப்பல்
பனிமலை ஒன்றில் மூழ்கியதில் 154 பேர் கொல்லப்பட்டனர்.
2009 – மகுயிண்டனாவோ படுகொலை : பிலிப்பீன்சில் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், ஆதரவாளர்கள் 58 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
2011 – அரேபிய வசந்தம் : யெமனில் 11 மாதங்கள் எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து யேமனிய அரசுத்தலைவர் அலி அப்துல்லா சாலி பதவி விலகினார்.

பிறப்புகள்
1837 – யோகான்னசு வான் டெர் வால்சு , நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (இ. 1923 )
1864 – பிரீட்ரிக் வில்கெல்ம் வான் சுத்ரூவ , செருமானிய-உருசிய வானியலாளர் (பி. 1793 )
1869 – வால்டெமர் பவுல்சன் , தென்மார்க்குப் பொறியியலாளர் (இ. 1942 )
1872 – ஆஷ் துரை , பிரித்தானிய அரசி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர், நீதிபதி (இ. 1911 )
1897 – நீரத் சந்திர சவுத்ரி, வங்காளதேச-ஆங்கிலேய வரலாற்றாளர், எழுத்தாளர் (இ. 1999 )
1908 – நிக்கலாய் நோசவ் , சோவியத் குழந்தைகள் எழுத்தாளர் (இ. 1976 )
1916 – பி. கே. பேஜ் , ஆங்கிலேய-கனடிய கவிஞர் (இ. 2010 )

1921 – சுரதா, தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (இ. 2006 )
1923 – ஏ. எல். சீனிவாசன் , தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்.
1926 – சத்திய சாயி பாபா , தென்னிந்தியத் துறவி, இந்து மெய்யியலாளர் (இ. 2011 )
1926 – தி. சு. கிள்ளிவளவன் , தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர், இதழாளர் (இ. 2015 )
1932 – செ. வை. சண்முகம், தமிழக மொழியியலாளர், கல்வெட்டாய்வாளர்
1939 – ஜீவா ஜீவரத்தினம் , ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1997 )
1953 – பிரான்சீஸ் காப்ரே , பிரான்சியப் பாடகர்
1962 – நிக்கோலசு மதுரோ , வெனிசுவேலா அரசுத்தலைவர்
1972 – விஜயகலா மகேசுவரன் , இலங்கை அரசியல்வாதி
1977 – பிரகாஷ் வீர் சாஸ்திரி , சமற்கிருத அறிஞர், அரசியல்வாதி (பி. 1923)
1979 – கெல்லி புரூக் , ஆங்கிலேய நடிகை
1986 – நாக சைதன்யா , தெலுங்குத் திரைப்பட நடிகர்
1990 – பூர்ணிதா , தென்னிந்தியத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகை.
1992 – மைலே சைரஸ் , அமெரிக்க நடிகை

இறப்புகள்

1826 – யோகான் எலர்ட் போடே , செருமானிய வானியலாளர் (பி.
1747 )
1844 – தாமசு ஜேம்சு எண்டர்சன் , இசுக்காட்டிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1798 )
1910 – ஆக்டேவ் சானுட் , அமெரிக்க கட்டுமானப் பொறியாளரும் வான்பறத்தலின் முன்னோடி (பி.
1832 )
1937 – ஜகதீஷ் சந்திர போஸ் , வங்காளதேச-இந்திய இயற்பியலாளர், உயிரியலாளர், தொல்லியலாளர் (பி. 1858)
1976 – ஆன்றே மால்றோ , பிரான்சிய எழுத்தாளர் (பி. 1901)
1976 – மு. திருச்செல்வம் , இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1907 )
1977 – பிரகாஷ் வீர் சாஸ்திரி , சமக்கிருத அறிஞர் (பி. 1923 )* 1990 –
ரூவால் டால் , பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1916)
1983 – லலிதா , தென்னிந்தியத் திரைப்பட நடிகை, நடனக் கலைஞர் (பி. 1930)

1990 – ரூவால் டால் , பிரித்தானியப் புதின எழுத்தாளர் (பி. 1916 )
1992 – மு. அருணாசலம், தமிழகத் தமிழறிஞர் (பி. 1909 )
2003 – முரசொலி மாறன் , தமிழக அரசியல்வாதி (பி. 1934 )
2012 – வீரபாண்டி எஸ். ஆறுமுகம் , தமிழக அரசியல்வாதி (பி. 1937 )
2014 – செல்வா கனகநாயகம் , ஈழத்துப் பேராசிரியர், எழுத்தாளர்
2016 – கே. சுபாஷ், தமிழ், இந்தித் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews