Breaking

Tuesday, October 02, 2018

உயிரெழுத்துக்களுடன் பட்டுச் சேலைகள் 'கோ-ஆக்டெக்ஸ்' அறிமுகம்


தமிழ் உயிரெழுத்துக் களுடன் நெய்யப்பட்ட பட்டுச் சேலைகள் 'கோ-ஆப் டெக்ஸ்'ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து மதுரை மண்டல மேலாளர் நாக ராஜன் கூறியதாவது: தீபாவளிக்கு 'கோ-ஆப்டெக்ஸ்' மூலம் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஆண்டு சீனப்பட்டு நுால்களில் தயாரிக்கப்பட்ட மென்பட்டுச் சேலையில், தமிழ் உயிரெழுத்துக்கள் பொறித்து அறிமுகம் செய்துள்ளோம். மாதிரி பட்டு நுால்களால் உருவாக்கப்பட்ட பட்டு ரக சேலைகள், இயற்கை சாயத்தால் உருவாக்கப்பட்ட பருத்திச் சேலைகள் விற்பனைக்கு உள்ளன. இயற்கை பருத்திச் சேலை 6.20 மீட்டரில், 5.30 மீட்டர் சேலைக்கும், 90 செ.மீ., ரவிக்கைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது, என்றார்

Total Pageviews

Search This Blog