தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு "ஆசான்" விருது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 29, 2018

Comments:0

தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு "ஆசான்" விருது



2017ல் தொடங்கப்பட்ட காவேரி நியூஸ் சேனல் நடத்தும் ( 27.8.2018 ) முதல் விழா ஆசிரியர்களுக்கான விழா. அவ்விழாவில் தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றும் 9 ஆசிரியர்களை 9 பிரிவின் கீழ் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு "ஆசான்" விருது வழங்கினர் .
திருமதி. விஜயலலிதா ( செயலூக்கும் ),
திரு.ஐயப்பன் ( மொழித்திறன் மேம்பாடு ),
திரு.விஜயராஜா ( மலைவாழ் மக்கள் மேம்பாடு ),
திரு.செல்வ சிதம்பரம் ( அறிவியல் விழிப்புணர்வு ),
மேக்டலினா ( படைப்பாற்றல் )
குருமூர்த்தி (கற்பித்தலில் புதுமை)
என்னும் பிரிவில் விருது வழங்கினர்.
விழாவிற்கு அமைச்சர்கள், கல்வியாளர்கள், திரைத்துறையினர் வந்திருந்தனர். பொதுவாக அமைச்சர்கள் விழாவிற்கு வரும்போது விழாவை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றிய பின் சென்றுவிடுவர் . ஆனால் இவ்விழாவிற்கு 6:30 மணிக்கு வந்த அமைச்சர்கள் விழா முடியும் வரை ( இரவு 9:30 ) இருக்கையில் வீற்றிருந்து நிகழ்ச்சிகளனைத்தையும் பார்த்தது வியப்பிலும் வியப்பு. அதிலும் கல்வி அமைச்சர் அவர்கள், "இங்கே விருது பெறும் 9 பேருக்கும் மாநில நல்லாசிரியர் விருதும் வழங்கப்படும்" என்று கூறியது சிறப்பிலும் சிறப்பு.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews