Breaking

Sunday, July 01, 2018

அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய உணவுடன், 'டியூஷன்



அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு, மாலை நேரத்தில், சிறுதானிய உணவுகளுடன் இலவசமாக, 'டியூஷன்' நடத்தப்படுகிறது. திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்குகிறது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். அதிகளவில், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட மாணவர்களே உள்ளனர்.

இது தவிர, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியர் ஏழை குடும்பத்தினர் என்பதால், அவர்களை கல்வியில் ஊக்குவிக்கவும், நன்றாக வாசிக்கும் திறனை வளர்க்கவும், அப்பகுதி இளம்பெண்கள் முயற்சி எடுத்துள்ளனர். இவர்களுடன், தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து மாணவர்களுக்கு, மாலை நேரத்தில், இலவச டியூஷனுடன் சிறுதானிய உணவும் வழங்கப்படுகிறது


👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog