அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில பிரிவு கோரி வழக்கு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 15, 2018

Comments:0

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில பிரிவு கோரி வழக்கு


அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், ஆங்கில வழி பிரிவுகளை விரிவுபடுத்த கோரி தாக்கலான வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க பொதுச் செயலர், கனகராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு:'அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்த, 1 மற்றும் 6ம் வகுப்பில், தலா இரண்டு ஆங்கில வழி இணை பிரிவுகள் துவக்கப் படும். படிப்படியாக, பிளஸ் 2 வரை ஆங்கிலவழி பிரிவுகள் துவக்கப்படும். 'முதல் கட்டமாக, 2012 - 13ம் கல்வியாண்டில், 320 அரசு பள்ளிகளில் துவக்கப்படும்' என, 2012 ஜூலை, 17ல், பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. இதனால், கட்டணம் இன்றி, ஏழை மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வி பெறுகின்றனர். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அப்படிச் செய்தால், 'நீட்' உட்பட போட்டித் தேர்வுகளை, மாணவர்கள் எதிர்கொள்ள முடியும்.உதவி பெறும் பள்ளிகளில் ஏற்படும், உபரி ஆசிரியர் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவும் உதவும்.


உதவி பெறும் பள்ளிகளில், ஆங்கிலவழி பிரிவுகளை ஏற்படுத்தக் கோரி, பள்ளிக்கல்வித் துறை செயலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.நீதிபதிகள், சி.டி.செல்வம், ஆர்.தாரணி அமர்வு, மனு மீதான விசாரணையை, இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews