7வது கல்வி ஆண்டை நிறைவுசெய்யும் 12000க்கும்மேலான தொகுப்பூதிய பகுதிநேரஆசிரியர்களுக்கு( தற்போது சம்பளம்ரூ.7700 ) பட்ஜெட் மானியக்கோரிக்கையில் தமிழகஅரசு புதிய அறிவிப்புகளை வெளியிட வலியுறுத்தல்.
மே மாதத்திற்கு ஊதியம்தரவேண்டி கல்விஅமைச்சர், பள்ளிக்கல்வி முதன்மை செயலர்மற்றும் அனைவருக்கும்கல்வி இயக்க மாநில திட்டஇயக்குநர் ஆகியோரை கடந்தஏப்ரல் மற்றும் நடப்பு மே மாதத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பரிசீலித்து வருவதாக அமைச்சர் மற்றும் செயலர் அவர்களும் நம்பிக்கை அளித்து இருந்தனர்.ஆனால் மே மாதத்திற்கு ஊதியம்தரவேண்டியது குறித்துஉத்தரவுகள் வரவில்லை எனஅனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் சொல்கிறார்கள்.
எனவே மே மாதம் ஊதியம்தருவது குறித்து செயல்முறை ஆணைகளை உடனடியாகவெளியிடவேண்டும். வருகின்ற ஜீன் மாதத்தில் பணிமாறுதல் நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
எனவே ஏற்கனவே 25.10.2017ல் கல்விஅமைச்சர் அவர்களை சந்தித்தபோது அவரவர் இருப்பிடபகுதிக்கு அருகில் அனைவருக்கும் பணிமாறுதல் தருவதாக சொன்னபடி விரைந்து
நடமுறைப்படுத்த வேண்டும். மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 7வது ஊதியக்கமிஷன் 30% ஊதிய உயர்வுடன் சேர்த்து கணிசமான ஊதிய உயர்வு மற்றும் அனைத்து வேலை நாட்களிலும் முழுநேர வேலை குறித்த அரசாணைகளை வெளியிட்டு இந்த மானியக்கோரிக்கை கூட்டத்தொடரிலே அரசு வெளியிட அனைவரும்வலியுறுத்தி வருகின்றனர் என்பதை கூடுதல் கவனம் செலுத்தி ஆவன செய்திட வேண்டும். ஊதிய முரண்பாடுகளைகலைய வலியுறுத்தும் ஒருநபர் குழுவிடம் தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்களுக்கு அனைத்து வேலைநாட்களிலும் முழுநேரப்பணியுடன் சிறப்புகாலமுறை ஊதியத்தில் பணியமர்த்த கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இந்ததருணத்திலாவது தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய நிலையான வேலையை உறுதிசெய்து அறிவிப்புகளை புதிய அரசாணையை வெளியிட வேண்டும்.
ஏற்கனவே ஜீன், ஜீலை2017ல் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் குறித்த திமுக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது என்றும், பணிநிரந்தரம் செய்ய கமிட்டி அமைக்கப்டும் எனவும் பதிலளித்துள்ளதை விரைந்து செயல்படுத்த வேண்டும் .
மேலும் ஜனவரி 2018ல் நடைபெற்ற கூட்டத்தொடரில் வேடச்சந்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தற்போது தரப்பட்டு வரும் தொகுப்பூதியமான ரூ.7700/-ஊதியத்தை உயர்த்தி தர வலியுறுத்தியதைகூட அரசு நடைமுறைப்படுத்தாமல் உள்ளது வேதனையளிக்கிறது.
தமிழக முதல்வரை சந்தித்தபோது (2.11.2017)
குறைந்தபட்சமாக சிறப்புகாலமுறை ஊதியத்தில் தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்களை பணியமர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.போராட்ட நாட்களில் 100%அளவில் பள்ளிகளை இயக்கிட அரசு உத்தரவிட்டு பகுதிநேர ஆசிரியர்களை முழுநேரமும் முழுஅளவில் பயன்படுத்தியதை அங்கீகரித்து, தமிழக அரசு மனிதநேயத்துடன் இந்த பட்ஜெட் மானியக்கோரிக்கை கூட்டத்தொடரிலாவது புதிய அரசாணை வெளியிட்டு சிறப்பாசிரியர்களாக காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த அனைவரும் ஒருமனதாக தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை விடுக்கிறோம்.
இவன்,
செந்தில்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,
செல் : 9487257203
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.