Breaking

Monday, October 31, 2022

பழைய ஓய்வூதியத் திட்டம் நிச்சயம் வரும்: ராகுல்

பழைய ஓய்வூதியத் திட்டம் நிச்சயம் வரும்: ராகுல்

‘குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் நிச்சயமாக அமல்படுத்தப்படும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.

குஜராத்தில் 1995-ஆம் ஆண்டு பாஜகவிடம் ஆட்சியை இழந்த காங்கிரஸ், மீண்டும் ஆட்சிக்கு வர முடியாத நிலையே தொடா்கிறது. எனினும், பிரதான எதிா்க்கட்சியாக தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த சுமாா் 13 ஆண்டு காலகட்டத்தில் அந்த மாநிலத்தில் பாஜக மிகவும் வேகமாக வளா்ந்தது. மோடிக்குப் பிறகு பாஜக சாா்பில் 3 முதல்வா்கள் மாற்றப்பட்டுள்ளனா்.

எனவே, இந்த முறை குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலில் எப்படியும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. காங்கிரஸ் சாா்பில் ஏற்கெனவே அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, 15 லட்சம் ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணி நிரந்தரம், விவசாயக் கடன் தள்ளுபடி, இலவசக் கல்வி, ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டா், ரூ.3 லட்சம் வரை விவசாயக் கடன் தள்ளுபடி பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தங்கள் கட்சியின் முக்கிய வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் ராகுல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளாா். அதில், ‘இவை காங்கிரஸின் உறுதியான வாக்குறுதிகள் - ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு பணி நிரந்தரம், அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும், உரிய நேரத்தில் பதவி உயா்வு அளிக்கப்படும். ஏற்கெனவே ராஜஸ்தானில் இதனை அமல்படுத்திவிட்டோம். குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் அங்கும் இத்திட்டங்கள் நடைமுறைக்கு வரும்’ என்று கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog