Breaking

Tuesday, February 01, 2022

மருத்துவ படிப்பிற்கு நாளை முதல் விருப்ப இடங்களை தேர்வு செய்யலாம்

மருத்துவ படிப்பிற்கு நாளை முதல் விருப்ப இடங்களை தேர்வு செய்யலாம்

சென்னை,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. சிறப்பு பிரிவு மாணவர்கள், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வு ஏற்கனவே நடைபெற்று முடிந்துவிட்டது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மீதமிருக்கும் 3 இடங்கள் 2-ம் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தநிலையில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் முறையாக ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஆன்-லைனில் கலந்தாய்வு தொடங்கியது. முதலில் பதிவு கட்டணம் செலுத்த இன்று (செவ்வாய்க்கிழமை) வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில் கடந்த 2 நாட்களில் பொதுப்பிரிவில் விண்ணப்பித்திருந்த 10 ஆயிரத்து 456 பேரில் 8 ஆயிரத்து 736 பேர் பதிவு செய்து இருப்பதாக மருத்துவ மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது. பதிவு செய்தவர்களுக்கு நாளை (புதன்கிழமை) முதல் 5-ந் தேதி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog