8-ம் வகுப்பு தனித்தேர்வு ஒத்திவைப்பு! - தேர்வுத்துறை அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 07, 2021

Comments:0

8-ம் வகுப்பு தனித்தேர்வு ஒத்திவைப்பு! - தேர்வுத்துறை அறிவிப்பு.

8-ம் வகுப்பு தனித்தேர்வு ஒத்திவைப்பு!

நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுவதாக இருந்த தமிழ், ஆங்கிலப் பாடத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைப்பு.

இதர தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.

தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா அறிவிப்பு.
தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 2021 - கனமழை காரணமாக 8.11.2021 மற்றும் 9.11.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடத்தேர்வுகள் மட்டும் ஒத்திவைத்தல் குறித்து செய்திக்குறிப்பு வெளியிடக் கோருதல் - தொடர்பாக.

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 8.11 2021 முதல் 12.11.2021 வரை நடைபெறவிருந்தது. தற்சமயம் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 8.11.2021 மற்றும் 9.11.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடத்தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்படுகிறது. இதரத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்விற்கான தேர்வுத் தேதிகள் தேர்வுத்துறையினால் பின்னர் அறிவிக்கப்படும்.

இச்செய்திக்குறிப்பினை தேர்வர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தங்கள் நாளிதழில் / தொலைக்காட்சியில் / வானொலியில் செய்தியாக வெளியிடும்படி கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இது செய்திக்குறிப்பு மட்டும். விளம்பரம் அல்ல.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews