பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி: இலங்கை அரசு முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 12, 2021

Comments:0

பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி: இலங்கை அரசு முடிவு

இலங்கையில் பள்ளி மாணவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தவுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து இலங்கை சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளதாவது: இலங்கையில் கோவிட் தொற்று மற்றும் உயிரிழப்புகள் குறைந்ததை அடுத்து, கடந்த அக்.,1ம் தேதியில் இருந்து ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இருப்பினும் பொதுக்கூட்டங்கள் நடத்தவும், ரயில்களை இயக்கவும் தடை நீடிக்கிறது.

இலங்கையில் 20 வயது நிறைவடைந்தவர்களில் 82 சதவீதம் பேருக்கு கோவிட் தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டு உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணியை, வரும் 21ம் தேதி இலங்கை அரசு தொடங்குகிறது. முதல்கட்டமாக 18 மற்றும் 19 வயது மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்த உள்ளது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews