1 முதல் 8 ஆம் வகுப்புகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க அனுமதி- சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் அனுமதி வழங்க தெரிவித்தல் தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல் முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 13, 2021

Comments:0

1 முதல் 8 ஆம் வகுப்புகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க அனுமதி- சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் அனுமதி வழங்க தெரிவித்தல் தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல் முறைகள்

தொடக்கக்கல்வி - ஆங்கில வழி பாடப்பிரிவு செயல்படும் சுயநிதி/ நிதியுதவி/ பகுதிநிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க அனுமதி சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் அனுமதி வழங்க தெரிவித்தல் தொடர்பாக.

பார்வை.

1. அரசாணை எண்.101, பள்ளிக் கல்வித்(Budget-1) துறை, நாள்.18.05.2018,

2. அரசாணை எண்.148, பள்ளிக் கல்வித் துறைநாள்.20.07.2018.

ஆணை:

தொடக்கக் கல்வி துறையின் கீழ் செயல்படும் நிதியுதவி/ பகுதிநிதியுதவி/ சுயநிதி தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க அனுமதி கோரும் கருத்துருக்கள் சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் சார்ந்த பள்ளியை பார்வையிட்டு அதன்படி கருத்துருக்கள் பரிந்துரையுடன் பெறப்பட்டு அவை பார்வை 2 ல் காணும் அரசாணைகளின்படி பரிசீலிக்கப்பட்டு உரிய அனுமதி இவ்வியக்ககத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

பார்வை 1-ல் காணும் அரசாணையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சில அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளில் சுயநிதி/ நிதியுதவி/ பகுதிநிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 6-10 வகுப்புகளில் ஆங்கில வழிப்பிரிவு துவங்க அனுமதியினை உரிய அரசாணைகளின் அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நிலையிலேயே வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில், இனிவரும் காலங்களில் அனைத்து மாவட்டத்தில் செயல்படும் சுயநிதி/ நிதியுதவி/ பகுதிநிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க அனுமதி கோரும் கோப்பின் தன்மையை கருதி கருத்துருக்களை பார்வை 2 ல் காணும்அரசாணையில் தெரிவித்துள்ள அனைத்து நிபந்தனைகளும் முழு அளவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை நன்கு பரிசீலித்து, ஆங்கில வழிப்பிரிவு துவங்க அனுமதியினை 50% பிரிவுகள் கண்டிப்பாக தமிழ்வழிப் பிரிவுகளாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நிலையிலேயே வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. உதாரணமாக ஒரு பள்ளியில் 4 பிரிவுகள் இருந்தால் 2 பிரிவுகள் தமிழ்வழி பிரிவாகவும், 2 பிரிவுகள் ஆங்கில வழி பிரிவாகவும் செயல்பட அனுமதி வழங்கலாம்." 3 பிரிவுகள் இருந்தால் 2 பிரிவுகள் தமிழ்வழி பிரிவாகவும், 1 பிரிவு ஆங்கில வழி பிரிவாகவும் செயல்பட அனுமதி வழங்கலாம்; 1 பிரிவு மட்டும் செயல்பட்டால் அது தமிழ்வழி பிரிவாகவே செயல்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews