Breaking

Tuesday, September 21, 2021

பணிவரன்முறை , தேர்வு நிலை , சிறப்பு நிலை பெற கல்விச் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை பெற வேண்டுமா? CM CELL REPLY

பணிவரன்முறை , தேர்வு நிலை , சிறப்பு நிலை பெற கல்விச் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை பெற வேண்டுமா ?? தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவில் பதில்
கோரிக்கை


மாண்புமிகு ஐயா வணக்கம்.


1) திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகள் உண்மைத்தன்மை பெற்றால் தான் பணிவரன்முறை தேர்வுநிலை சிறப்புநிலை மற்றும் இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு சரிசெய்தல் ஆகியவைகள் அனுமதிக்கப்பட வேண்டும் என கல்வித்துறை சார்பில் உத்தரவுகள் ஏதும் வெளியிடப்பட்டு உள்ளதா என்றும் ஆம் எனில் அந்த உத்தரவுகளின் விபரங்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.


2) ஆசிரியர்கள் கல்விச் சான்றுகளின் உண்மைத்தன்மை பெறாத நிலையிலும் பணிவரன்முறை தேர்வுநிலை சிறப்புநிலை மற்றும் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு சரிசெய்தல் ஆகியவைகளுக்கு இனி வரும் காலங்களில் மாவட்டக்கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்து உரிய உத்தரவுகளை பெற்றுக் கொள்ளலாமா? என்பது குறித்து தெரிவிக்க வேண்டுகிறேன்.


3) மேற்கண்ட எனது ஐயங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு சார்பில் வழங்கப்படும் விபரங்கள் அல்லது பதில்களை உரிய அலுவர்களிடம் சார்பு செய்து நிவாரணம் பெற்றுக் கொள்வது குறித்து தெரிவிக்க வேண்டுகிறேன். பதில்


ஏற்கப்பட்டது. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தங்களது பணிநியமன ஆணையிலே அன்னாரின் கல்விச் சான்றுகள், சாதிச் சான்று மற்றும் இதர ஆவணங்கள் மீது உண்மைத்தன்மை கண்டறிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து அரசுப் பணியாளர்களும் தங்களது கல்விச் சான்றுகள், சாதிச் சான்று மற்றும் இதர ஆவணங்கள் மீது உண்மைத்தன்மை கண்டறிய வேண்டும் என்பது அவசியமானது என்ற விவரம் திருப்பூர் முதன்மைக்கல்வி அலுவலரின் ந.க.எண். 7547/ இ3/ 2021 நாள். 15.09.2021- இன்படி மனுதாரருக்கு தெரிவிக்கலாகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog