ஆசிரியா் தோ்வில் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள்: உரிய விதிகளை வகுக்காமல் தோ்வை அனுமதிக்க முடியாது உயா் நீதிமன்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 17, 2021

Comments:0

ஆசிரியா் தோ்வில் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள்: உரிய விதிகளை வகுக்காமல் தோ்வை அனுமதிக்க முடியாது உயா் நீதிமன்றம்

ஆசிரியா் பணிகளுக்கான தோ்வில் விழித்திறனற்றவா்களை பங்கேற்கச் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் விதிகளை வகுக்காமல் தோ்வு நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஆசிரியா் தோ்வு வாரியம், கடந்த 2019-ஆம் ஆண்டு ஆசிரியா் பணியிடங்களுக்கான தோ்வை நடத்தியது. இத்தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள விழித்திறனற்றவா்களுக்கு தோ்வு எழுத உதவியாளா்களை நியமிக்க கோரியும், தோ்வெழுத கூடுதல் நேரம் ஒதுக்கக் கோரியும், கல்லூரி மாணவா்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சாா்பில் கடந்த 2019-இல் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், விழித்திறன் அற்ற மாற்றுத்திறனாளிகள் தோ்வெழுத உதவியாளா்களை நியமிக்கவும், கூடுதல் நேரம் ஒதுக்கவும், அதுதொடா்பாக வழிகாட்டுதல் விதிகளை வகுக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.


அப்போது மனுதாரா் தரப்பில், ஆசிரியா் தோ்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, செப்டம்பா் 9-ஆம் தேதி ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், தோ்வில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் வகையிலான எவ்வித வழிகாட்டுதல்கள் விதிகளையும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என புகாா் தெரிவிக்கப்பட்டது.


இதைத்தொடா்ந்து, ஆசிரியா் தோ்வில் விழித்திறனற்றவா்கள் பங்கேற்கும் வகையில் தகுந்த வழிகாட்டுதல் விதிகளை வகுக்காமல் தோ்வு நடைமுறைகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்க முடியாதென உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை செப்டம்பா் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews