Breaking

Monday, August 16, 2021

இலவச கல்வி உபகரணத்தின் தரம் குறித்து மாணவர்களின் கருத்துபெற உத்தரவு

தமிழ கத்தில் பள்ளி மாணவர் களுக்கு வழங்கப்படும் விலையில்லா கல்வி உபகர ணங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய, அனைத்து மாவட்ட சிஇஓக்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு. அரசு உதவிபெறும் பள் ளிகளில் படிக்கும் மாண வர்களுக்கு, விலையில்லா பாடபுத்தகம், நோட்டு புத்தகம், சீருடை, கணித உபகரணங்கள், லேப்டாப் உள்பட பல்வகையான கல்வி உபகரண பொருட் கள் வழங்கப்பட்டு வரு கிறது. ஆண்டுதோறும், பள்ளிகளில் சேரும் மாண வர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தனியாக பட்டியல் தயாரித்து, இந்த உபகரணங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்டத் தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசி ரியர்கள் வாயிலாக கருத் துருக்களை பெற்று, கல்வி மாவட்டம் வாரியான தொகுப்பறிக்கையை தமிழ்நாடு பாடநூல் மற் றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு அனுப்ப நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog