Breaking

Wednesday, August 18, 2021

தமிழகத்தில் பி.காம், ஆங்கில பாடங்களுக்கு மவுசு – கல்லூரிகளில் குவியும் மாணவர்கள்!

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் வழக்கம் போல பி.காம்.பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.ஏ. ஆங்கிலம் போன்ற பாடப்பிரிவுகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. பெரும்பாலான கல்லூரிகளில் இரண்டாவது ஷிஃப்டிலும், பிகாம், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆங்கிலப் பாடப் பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுவதால் அவற்றில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பாட பிரிவுகள் :

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளில் நேரடி மாணவர்கள் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்லைன் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டில் 12 ம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் செய்துள்ளதை அடுத்து கல்லூரிகளில் விரும்பிய பாட பிரிவுகளில் சேர கடும் போட்டி நிலவுகிறது. 60 சதவீதத்திற்கு அதிகமானோர் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டியுள்ளனர். கடந்த ஆண்டைவிட, நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது என்று உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஓரிரு நாட்களில் கல்லூரிகள் தொடங்கும் என்றும் அரசுக் கல்லூரிகளில் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொறியியல் கல்லூரிகளை விட கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள 26 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன.

எல்லாக் கல்லூரிகளிலும் வழக்கம்போல் பி.காம்., பி.எஸ் சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.ஏ. ஆங்கிலம் போன்ற பாடப்பிரிவுகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. பெரும்பாலான கல்லூரிகளில் இரண்டாவது ஷிப்டில், பி காம், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆங்கிலப் பாடப் பிரிவுகள் பயிற்றுவிக்கப் படுவதால் அதில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். கொரோனா வேகம்படுத்து பரவுவதால் நடப்புக் கல்வியாண்டிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog