Breaking

Thursday, August 19, 2021

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கும் தேதி – முதல்வர் நாளை அறிவிப்பு!

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கும் தேதி – முதல்வர் நாளை அறிவிப்பு!

கொரோனா தொற்றால் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது.பள்ளிகள் திறப்பது குறித்த கேள்விகளுக்கு நாளை முதல்வர் உயரதிகாரிகளுடன் பள்ளி திறப்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாகவும் அதன் பின் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

பள்ளி திறப்பு:

கொரோனா தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு அடைந்தது. இந்தியாவில் நோய் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் நாளுக்கு நாள் நோய் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதம் அதிகரித்து வந்தது. இதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. அதனை தபோட்ஸார்ந்து மாணவர்களின் எதிர்ர்களைத்தாய் கருத்தில்கொண்டு ஆன்லைன் மூலம் படங்கள் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதிகள் குறித்தும் பல்வேறு தரப்பினர் கேள்விகள் எழுப்பி வந்தனர். அதனை தொடர்ந்து செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கலாம் என மருத்துவ குழு அறிவுரை கூறிய நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு அன்பில் மகேஷ் அவர்கள் ஆலோசனை செய்ததில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். எனவே நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உயரதிகாரிகளுடன் பள்ளி திறப்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாகவும் ஆலோசனைக்குப் பின்னர் அவர் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog