Breaking

Sunday, August 01, 2021

தமிழகத்தில் முதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு எதிர்ப்பு – முதல்வர் கடிதம்!

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய முதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதுகலை மருத்துவ கல்வி:

முதுகலை மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் இதுவரை மாநில அரசுகளின் ஒதுக்கீடு முறையே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநில அரசுகளின் ஒதுக்கீடு முறையை மத்திய அரசு ரத்து வகையில், இனி நாடு முழுவதும் முதுகலை மருத்துவ படிப்பில் மத்திய அரசின் ஒதுக்கீடு முறைப்படியே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு இன்று புதிதாக முதுகலை மருத்துவ கல்வி வரைவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, 2021 மாணவர் சேர்க்கை தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில், நாடு முழுவதுக்குமான மாநில அரசின் இடங்களுக்கும் ஒன்றிய அரசே மாணவர் சேர்க்கை நடத்தும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக மத்திய அரசின் மருத்துவத்துறை தலைமை இயக்குனருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் கீழ் முதுகலை மருத்துவ சேர்க்கையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், மத்திய அரசின் இந்த முடிவிற்கு தமிழக அரசு உறுதியான எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இந்த சட்டத்தை நான் மிக வன்மையாக கண்டிக்கிறது

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog