Breaking

Thursday, August 05, 2021

தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு அவர்களின் படிப்பினை தொடர முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கும் திட்டம் - செ.வெ.எண்: 04/ஆகஸ்டு - நாள்: 04.08.2021

செ.வெ.எண்: 04/ஆகஸ்டு
நாள்: 04.08.2021

பத்திரிக்கைச் செய்தி

தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு அவர்களின் படிப்பினை தொடர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் காலத்தில் ஒரு முறை மட்டும் தலா ரூ.50,000/ வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி தொகையினை பெற ஒற்றைச்சாளர முறையில் சேர்க்கை பெறும் தகுதியுள்ள தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை தருமபுரி அரசினர் பொறியியல் கல்லூரி, முதல்வரிடம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தருமபுரி.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog